உண்மை, தூய்மை, சுயநலமின்மை இந்த மூன்று குணங்களும் பெற்றிருப்பவர்களை நசுக்கக்கூடிய ஆற்றல் விண்ணுலகிலும் இல்லை, இந்த மண்ணுலகிலும் இல்லை. இந்த மூன்றினையும் பெற்றவனை பிரபஞ்சமே எதிர்த்து நின்றாலும் அதை எதிர்த்து போரிடும் ஆற்றல் அவனுக்கு உண்டு. நீ செய்த தவறுகளை வாழ்த்தக் கற்றுக்கொள். அந்த தவறுகளே உனக்கு வழிகாட்டும் தெய்வங்கள். தவறு செய்தவன் மீண்டும் தவறான பாதைக்கு செல்ல மாட்டான். சரியான பாதையில் செல்வதற்கான முயற்சியை மேற்கொள்வான். அதனால், வாழ்வில் தவறினால் உண்டாகும் துன்பங்களுக்கும் நல்வாழ்த்துக்கள் தெரிவியுங்கள்.
நம்மை விட தாழ்ந்த நிலையில் இருப்பவர் மீது இரக்கம் கொள்ளுங்கள். ஏழைகள், அறியாமையில் இருப்பவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் ஆகியவர்களுக்காக இரக்கம் கொள்ளுங்கள். இதயமே நின்று போகும் வரையிலும், மூளை கொதித்துப்போகும் வரையிலும் இரக்கம் கொள்ளுங்கள். அடுத்தவரின் பாதையை பின்பற்றாதீர்கள். ஏனெனில், அது அவருடைய பாதை. உங்களுடையது அல்ல. உங்களுடைய பாதையை கண்டுபிடித்து விட்டீர்களானால், அதன் பிறகு நீங்கள் செய்ய வேண்டியது என்று எதுவும் இல்லை. அப்பாதையில் கைகளை குவித்த வண்ணம் சரணடைந்து விடுங்கள்.
Wednesday, August 6, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment